வியாழன், 14 அக்டோபர், 2010

அமெரிக்கா மண்டைதீவில் ஹோட்டல் அமைக்கிறது(அதிசயம் ஆனால் உண்மை)

அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசி யல் வாதிகளுக்கும் கண்ணில் படாமல்போன மண்டைதீவை அமெரிக்கா கண்டறிந்தமை மன நிறைவைத் தருவதாகும். மண்டைதீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு ஏற்படுத்தக்கூடிய பறவைகள் சரணாலயம், இறால் வளர்ப்புத் திட்டம் பற்றி எல்லாம் இவ் விடத்தில் பல தடவைகள் எழுதியிருந்தோம்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு-திருமதி யூட்விஜயதாஸ்தம்பதிகளின் செல்வப்புதல்வி-யூலிஷா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 13-10-2010 அன்று தனது அப்பா-அம்மா-மாமாமார்-அத்தைமார்பெரியப்பா-பெரியம்மா-அக்காமார்-அண்ணாமார்-மச்சாள்மார்-மச்சான்மார் சித்தப்பா-தொட்டப்பா-தொட்டம்மா-நண்பர்கள்-எல்லோரும் வாழ்த்த-சுவீடனில் உள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்போடு வாழ்த்துபவர்கள் அப்பா-அம்மா
உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-அல்லைப்பிட்டி மக்கள்
அல்லையூர் இணையம்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்- திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை

தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர்க் காணிக்கை

                                              
அல்லையூர் கறண்டப்பாய்க் கந்தசுவாமி ஆலயத்தில்
  நல்லவர் அருளம்பலம் நாடிநின்ற திருப் பணியே!
வல்ல அறங்காவலரின் வரிசையிலே முதல்வராய்ப்
  பல்லாண்டு காலமாய்ப் பாடுபட்டு உழைத்திட்டார்.
முக்கால் நூற்றாண்டு முருகபணி ஆற்றியவர்
இக்காலம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.
  தற்கால ஆலயப் பரிபாலன சபையினர் நாம்
பொற்கால மனிதருக்குச் சூட்டுகின்றோம்
                               அஞ்சலிகள்


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம்.


அல்லைப்பிட்டி கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய
                                                  பரிபாலன சபை

வியாழன், 7 அக்டோபர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு சிவபாலன்-ஆனந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுதர்சன்தனது 12வது பிறந்தநாளை பிரான்ஸில் உள்ள தமது இல்லத்தில் சிறப்பாக-கொண்டாடுகின்றார்.அவரை -அல்லைப்பிட்டி மக்கள்சார்பிலும்-அல்லையூர்இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

புதன், 6 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டியில் தகவல் மையம்

அல்லைப்பிட்டியில் தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்டவேலைகளில்அல்லையூர்இணையம் ஈடுபட்டுள்ளது.                       முதற் கட்டமாக வெளிநாடுகளில் வாழும் எம்மூர் மக்களுடனான தொடர்புகளை இலகுப்படுத்தும்நோக்கோடு அமையவிருக்கும் இத்தகவல் மையத்திற்கான இடம் அல்லைப்பிட்டியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து படித்த இளைஞர்களுக்கு பகுதிநேரவேலை வாய்ப்பினை வழங்குவதோடு,இணையவசதி தொலைபேசி வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதே! இதன்நோக்கமாகும்.
01/01/2011 அன்று இந்த தகவல் மையம் செயற்படத் தொடங்கும் என்பதனை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.இத்தகவல் மையத்தினால்
அல்லைப்பிட்டி-மண்கும்பான்-மண்டைதீவு -மக்கள் பெரிதும் பயனடைவர்
என நம்புகின்றோம்.
குறிப்பு*******.உங்கள் கருத்துக்களையும்-ஆலோசனைகளையும் எதிர் பார்க்கின்றோம்.

அன்னை திருமதி சிரோன்மணி தில்லைநாதன் அவர்களுடைய ஆண்டுத்திவச நிழற்படத்தொகுப்பு

அன்னை திருமதி-சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டுத்திவச நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின்-இல்லத்தில் 05-10-2010-செவ்வாய்க்கழமை அன்று நடைபெற்றது.
மேலும் கீழே 28 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

செவ்வாய், 5 அக்டோபர், 2010

தாலாட்டும் ஊர் ஞாபகங்கள்

                                            அல்லையூர்-த.தவபாலன்
ஒற்றைப் பனைமர நிழலும்-ஈச்சம்
பற்றைக் காடுகள் பலவும்
பழகித் திரிந்த தோழர் பலபேர்-நினைவும்
பறித்துத் தின்ற மாங்காய்ப் பிஞ்சும்
அம்மா காச்சிய ஒடியல் கூழும்
நினைவை நிறைக்கிறதே!
நெஞ்சைத் துக்கம் அடைக்கிறதே!

படித்து வந்த பள்ளிக் கூடம்
நடித்து மகிழ்ந்த நாடகக் கலைகள்-
குடித்துக் களித்த இளநீர்-நொங்கு
திகட்ட-திகட்ட நெஞ்சம் நினைக்கும்.
நினைக்க- நினைக்க இதயம் மகிழும்

நட்டநடு வீதியில் கிட்டிப்புல்லடித்து
சுடு மணலில் கிளித்தட்டு மறித்து-
வெற்றுக் காலுடன் உதைபந்தடித்து
ஊருக்குள் விளையாடிய பொழுதுகளெல்லாம்
கனவினில் வருகிறதே! கண்ணீர் தான் சொரிகிறதே!

புசிக்காத வயிறு பசியினில் கொதிக்க-
கடந்து போகுமிதுவுமென்று
அசைக்க முடியாத தன்னம்பிக்கை மனதிலிருக்க
எதிர்த் தோடினோம் இடர்கள் பொடிபட
இன்னமும் ஓடுவோம்-கனவுகள் மெய்ப்பட......

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

அல்லை கறண்டபாய் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள்
பசியாறுவதை படத்தில் காணலாம்.

திங்கள், 4 அக்டோபர், 2010

அல்லையூர் இணையத்திற்கு மனந்திறந்து வந்த மடல் ஒன்று!


அல்லையூர் இணையத்திற்கு!  எனது அன்பு கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! உரித்தாகுக! அல்லையூர் இணையத்தளம் எமது கிராம மக்களின் உறவுப்பாலமாக எமது ஊரை நினைத்துப் பார்க்கவைக்கும், கடமையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றது. இதற்காக இந்த இணையத்தை பாராட்ட விரும்புகின்றேன்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின் இல்லத்தில்
5/10/2010 செவ்வாய்கிழமை நடைபெறும் ஆண்டுத் திவச
நிகழ்வுகளை இத்தளத்தில் பார்வையிடலாம்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில்

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பணியினை பிரான்ஸில் வசிக்கும் எஸ்-இராஜலிங்கம்(S-R)அவர்கள் தமது பெற்றோர்களின் நினைவாக இச்சுற்றுமதிலை அமைத்துக் கொடுப்பதாகக் அல்லையூர் இணையத்திற்கு கூறினார்.தொடர்ந்து மதில் அமைக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

அமரர் மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

திருகோணமலையை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்கொண்ட அமரர் திரு மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரித்திய நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!
மேலும் கீழே 15 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

வைரம் பாய்ந்த உடம்பு


சனி, 2 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையின் அறிவித்தல்

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையினர்அல்லையூர் இணையத்திற்கு கறண்டப்பாய் ஸ்ரீ முருகன் ஆலய நிதிநிலைவிபரம் அடங்கிய புத்தகத் தொகுப்பினை அனுப்பி வைத்துள்ளனர். இதனைப்பெறவிரும்பும் பிரான்ஸ் வாழ் அல்லைப்பிட்டி மக்கள் எம்முடன் தொடர்பினைஏற்படுத்தவும்.

அல்லையூர் இணையம் 01/10/2010 வெள்ளி அன்று அல்லைப்பிட்டியில் நடத்திய உதவித்திட்ட நிகழ்வு

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் -வறுமைக்கோட்டின்கீழ்
வாழும் 31 குடும்பங்களை,அல்லைப்பிட்டி கிராமசேவையாளரூடாக தெரிவுசெய்து
அவர்களுகான நிதியினை பிரான்ஸில் வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் திரட்டி(திருமதி
தேன்மொழி-இராமலிங்கம்-20000-00 ரூபாக்களும் மற்றும் இரு அல்லைப்பிட்டி மக்களும்
தலா-10000.00 ரூபாக்கள்)அனுப்பியிருந்தது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல்லைப்பிட்டி புனித பிலிப் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பொறுப்பேற்று மிகச்சிறப்பாக நடத்தினர்.அத்தோடு இன்நிகழ்வில் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள்-சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்- மற்றும் வாகீசர் சனசமுக நிலைய நிர்வாக உறுப்பினர்களும்-பெருமளவானபொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு இங்கு வருகை தந்த அனைவருக்கும்வடை -தேனீர் முதலியன வழங்கப்பட்டன.இதில் கலந்து ஆயிரம் ரூபாக்களை பெற்றுக்கொண்டமக்கள் அனைவரும் அல்லையூர் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் கீழே 65 படங்கள் பதியப்பட்டுள்ளன!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இதுவரை மண்டைதீவில் 950 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாம்.

கடந்த யுத்த காலப் பகுதியின் போது மண்டைதீவில் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சமீபமாக புதைக்கப்பட்டிருந்த சுமார் 950 வரையிலான மிதிவெடிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.